செவ்வாய், 16 மார்ச், 2010

கங்குலி ரசிகர்களுக்கு அனுதாபம்!


புறா ஜோசியம் ஏன் பலிக்கவில்லை என்பது பற்றி ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஜோசியர் தலைமையில் 4 நபர் குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. 10 நாள்களுக்குள் அந்தக்குழு, கம்பெனியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். சமர்ப்பிக்க முடியவில்லையெனில் கால நீட்டிப்பு வழங்கப்படும்.

இதற்கிடையே, பலன் சொல்லி வந்த புறாவை மர்மக்கும்பல் ஒன்று நேற்றிரவு கடாயி்ல் போட்டுக் காய்ச்சிவிட்டது. ஒப்பந்தங்கள் மீறப்பட்டன. இது தொடர்பாக 4 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

மங்கூஸ் பேட் எடுத்து வருவார் என்ற எதிர்ப்பார்பில் ஹேடனை எதிர்பார்த்துக் காத்திருந்த ரசிகர்கள் நேற்று ஏமாற்றப்பட்டனர். எந்த பேட்டை வைத்து ஆடினாலும் சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும் என்பது போன்ற வசனங்களை கோல்கத்தா மைதானத்தில் நேற்று கேட்க முடிந்தது.


நேற்று ஜோசியத்தைக் கேட்டதும் கேகேஆர் ரசிகர்கள் பலர் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டு பல்சரில் பறந்து கொண்டிருந்தனர். ஆட்டம் முடியும் நேரத்தில், சாலையோரம் இருந்த போதி மரத்தில் பல்சர் மோதியதில் அவர்களுக்கு ஞானம் கிடைத்திருக்கிறது.நேற்று நள்ளிரவில் அவர்களைப் போன்ற நூற்றுக் கணக்கானோர் டாஸ்மாக்கில் மட்டையாகிக் கிடந்ததைப் பார்க்க முடிந்தது.

கங்குலியைப் பற்றிக் எதுவும் பேசுவதற்கில்லை. பேசாமல் அவர் ஆடாத கேப்டனாக இருக்கலாம். இன்னும் கெயில், மெக்குல்லம் போன்றவர்கள் வரும்போது இவர் வழிவிட்டுவிடலாம் என கேகேஆர் ரசிகர் மன்றங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கின்றன.

ஷான் பாண்ட் நன்றாகத்தான் பவுலிங் போட்டுக் கொண்டிருந்தார். அப்புறம் கங்குலி வந்து யோசனை சொன்னதும், எல்லாம் டர்.... டர்... ஆகிவிட்டது. இன்னமும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் கங்குலி, மைதானத்தில் கோபமாக கத்திக் கொண்டு திரிவதை பார்க்கச் சகிக்கவில்லை. அவரிடம் தொழில் கற்றுக்கொண்ட தோனி, எவ்வளவு கெத்தாக இருக்கிறார் என்பதை கவனிக்கவில்லை போலும்.

...

..

.

1 கருத்து: