புதன், 24 மார்ச், 2010

ஐபிஎல் அடக்கி வாசிப்பு: ஆஸ்திரேலியாவா? சிங்களமா?

கடந்த உலகக் கோப்பையில் திராவிட் தலைமையிலான அணி தோற்றுப் போனதற்கு முழுக்க முழுக்கக் காரணம் தோனிதான். அதுவரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்தவர், உலகக் கோப்பையில் மட்டும் சொதப்பினார்.

 உலகக் கோப்பை முதல் சுற்றிலேயே பிசிசிஐ அணி வெளியேறியதும், திராவிட் மிகவும் சோகமானார். விரக்தியின் உச்சத்துக்கே போனார். அப்போதுதான் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி வந்தது. போனால் போகட்டும் என்று தோனியை கேப்டனாக அனுப்பி வைத்தார்கள். திராவிட்டும் தனக்குப் பின்னால் நடக்கும் சதியைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியாதவராக இருந்தார்.

அந்தச் சமயத்தில் கேப்டன் பொறுப்பு தோனிக்குப் பதிலாக யுவராஜுக்குத்தான் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். கூடுதல் அனுபவம் பெற்றவர் அவராகத்தான் இருந்தார். ஆனாலும் தோனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதில் ஏதோ உள்விவகாரம் இருந்தது.

திராவிட்டுக்குச் சோதனைக்குச் சோதனையாக அந்த போட்டியில் தோனி தலைமையிலான அணி கோப்பையை வென்றது. அதுதான் இந்தியக் கிரிக்கெட் அணி என்று கூறப்படும் பிசிசிஐ அணியில் ஏற்பட்ட மாபெரும் திருப்பம். அந்த வெற்றியில், திராவிட்டின் கேப்டன் பதவி பறிபோனதுடன், யுவராஜின் கனவும் தகர்ந்தது.

ஆக, திராவிட்டுக்கும் யுவராஜுக்கும் பொது எதிரி தோனி.

இந்த எதிர்ப்பு வெளிப்பாட்டால்தான் கடந்த போட்டியின்போது சென்னை அணியை வெற்றி கொண்டபோது யுவராஜ் அதிகப்படியாக அலட்டினார். துள்ளிக் குதித்தார்.

இன்றைக்கு ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியுடன் மோதும் ஆட்டத்தில் யுவராஜ் சிங்குக்கு இந்த அளவு உற்சாகம் இருக்காது என்று கணிக்க முடிகிறது. ஆனாலும் "நீங்க எத்தனை ரன் எடுத்தாலும் அதைவிடக் குறைவா எங்களால் எடுக்க முடியும்" என்று ஆவேசமாகப் பேசும் நிலையில்தான் ராஜஸ்தான் அணி உள்ளது. ஸ்மித் பிளைட் பிடித்து போனபிறகு யூசுப் பதானை நம்பியது அந்த அணி. அவரோ ஒரு செஞ்சுரிக்குப் பிறகு தொடர்ந்து புஸ்வாணம் விட்டுக் கொண்டிருக்கிறார்.

பஞ்சாப் அணியில் யுவராஜ், சங்ககார, பதான் ஆட்டம் சரியாக இருந்தால் வெற்றி அவர்களுக்குத்தான்.
..
.

1 கருத்து: