வியாழன், 25 மார்ச், 2010

ஐபிஎல் ஜோக்கர்ஸ்

தென்னாப்பிரிக்க அணிக்கு ராசியே இல்லை என்ற கருத்து பொதுவாக இருக்கிறது. 99 உலகக் கோப்பையில் அது அப்பட்டமாகத் தெரிந்தது. சூப்பர் சிக்ஸ் என்று வித்தியாசமான சுற்று அந்த ஆண்டில் அறிமுகமாகியிருந்தது. ஜிம்பாப்வேயிடம் படு கேவலமாகத் தோற்றுப்போன பிசிசிஐ அணி, அரையிறுதிக்குப் போகமுடியாமல் வெறியேறியது. காரணம் சூப்பர் சிக்ஸ்தான்.

ஒரு அரையிறுதியில் தென்னாப்பிரிக்காவும் ஆஸ்திரேலியாவும் மோதின. ஆலன் டொனால்டு, லான்ஸ் க்ளூஸ்னர், போலக், காலிஸ், கிப்ஸ் ரோட்ஸ் போன்றவர்கள் தென்னாப்பிரிக்கா பக்கமும், கில்கிறிஸ்ட், ஸ்வீவ் வா, மார்க் வா, வார்னே, பெவன் போன்றவர்கள் ஆஸ்திரேலியா பக்கமும் இருந்தனர்.  ஆட்டம் அனல் பறந்தது. போலக், க்ளூஸ்னர் பந்துவீச்சில் 213 ரன்களுக்கு ஆஸ்திரேலியா சுருண்டது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சும் கனமாகத்தான் இருந்தது. ஆனாலும் தென்னாப்பிரிக்கு வெற்றிபெற வாய்ப்பிருந்தது. கடைசியில் 12 பந்துகளில் 18 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. 3 விக்கெட்டுகள் கையில். தொடங்கியது சோகம். 2 பேர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். க்ளூஸ்னர் ஒரு சிக்ஸ் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு நம்பிக்கையூட்டினார்.

கடைசி ஓவர். முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து பவுண்டரி. வெற்றிபெற ஒரே ரன். பேட் செய்வது ஜாம்பவான் க்ளூஸ்னர். மறுபக்கம் ஆலன் டொனால்டு. ரன் அவுட். சூப்பர் சிக்ஸ் பட்டியலில் மேலிருந்த அடிப்படையில் ஆஸ்திரேலியா உள்ளே. தென்னாப்பிரிக்கா வெளியே.

தென்னாப்பிரிக்க அணியின் துரதிருஷ்டம் என்பதைத் தவிர, இந்தப் போட்டியில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று இருக்கிறது. அது குரோனியே. அவர் எடுத்த ரன்கள் பூஜ்ஜியம்.

கிங்ஸ் விசாரணைக் குழு முன்னிலையில் க்ரோனியே கதறிக் கதறி அழுதாரே, அப்போது அவரிடம் இந்தப் போட்டி பற்றிதான் கேட்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய ஒரு போட்டியிலேயே சூதாட்டம் புகுந்திருக்கும்போது, ஐபிஎல் போட்டிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.

ஒரு எளிமையான தியரி. ஒவ்வொரு ஆண்டு ஐபிஎல் போட்டியிலும் 2 அணிகள் ஜோக்கர்களாக இருப்பார்கள். அந்த இரண்டு அணிகளுக்கு வெற்றிபெறுவது நோக்கமே கிடையாது. அவர்கள் மற்ற அணிகளுக்கு இணக்கமாக ஆட வேண்டும். அதாவது, மற்ற அணிகள், புள்ளி பட்டியலில் முன்னேறுவதற்கும், அரையிறுதிக்குத் தகுதி பெறுவதற்கும் உதவ வேண்டும். எதிரணியைச் சேர்ந்த சில ஆட்டக்காரர்கள் அதிக ரன்களைப் பெறுவதற்கும் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கும் பயன்படுவதான் இந்த இரு அணிகளின் பணி. இப்படி உதவி செய்வதன் மூலமாக இந்த அணிகள் சம்பாதிக்கின்றன. அவர்கள் தோற்றாலும் வெற்றிதான். 2008 ஐபிஎல் போட்டியில், டெக்கானும், பெங்களூரும்,  2009-ல் மும்பை இந்தியன்ஸ், கோல்கத்தா, ராஜஸ்தான் போன்ற அணிகளும் இதைச் செய்திருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்திருக்கிறது.

இதேபோல், ஒன் டூ ஒன் சமரச உடன்பாடுகளும் ஐபிஎல் போட்டிகளில் நடக்கின்றன. அதாவது எதிரெதிர் அணிகளைச் சேர்ந்த இருவர் பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் ஒப்பந்தம் செய்து கொள்வது. இருவருமே அந்தந்த அணிகளில் நிலையான இடத்தைப் பிடித்துக் கொள்வதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கம்.

மக்களுக்குத் தேவை களியாட்டம்தானே.

..

.

2 கருத்துகள்:

  1. என்னதான் திட்டம் போட்டாலும் கிரிக்கெட்டில் நாம் நினைத்தது அவ்வளவு எளிதில் நடக்காது

    பதிலளிநீக்கு
  2. {{{{உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்திய ஒரு போட்டியிலேயே சூதாட்டம் புகுந்திருக்கும்போது, ஐபிஎல் போட்டிகளைப் பற்றி புரிந்து கொள்ள முடிகிறது.}}}}

    எல்லோருக்கும் புரிந்தால் சரி !!!!

    பதிலளிநீக்கு