புதன், 17 மார்ச், 2010

பெரோஷா கோட்லா: என்ன உள்குத்து?

இன்றைய ஐபிஎல் ஆட்டம் நடைபெறும் பெரோஷா கோட்லா மைதானம் சப்பையானது. ஏற்கெனவே விவகாரங்களுக்கு உள்ளானது. பிசிசிஐக்கும் அருண் ஜேட்லிக்கும் இடையே நடந்து வரும் அரசியல் பனிப்போருக்கு இந்த மைதானம் ஏற்கெனவே பலியாகியிருக்கிறது. இதற்கான அடிப்படையைத் ஊகித்துப் புரிந்து கொள்ளவும்.

இந்தச் சண்டையின் காரணமாகத்தான், கடந்த ஆண்டு இலங்கையுடனான போட்டியின்போது, பந்து எகிறி வருவதாகக்கூறி அந்த மைதானத்துக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. உண்மையில் பந்து எகிறித்தான் வந்தது என்றாலும் அதன் பின்னணியில் உண்மையிலேயே அரசியல் சதி இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அந்தத் தடை இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், களம் "தயாராகி" விட்டதாகக் கூறி இன்னிக்கு மேட்ச் ஆடப் போகிறார்கள். என்ன தயாரானதோ தெரியவில்லை. ஐபிஎல்லின் பலத்தைக் கவனியுங்கள்!
..
..
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக