திங்கள், 22 மார்ச், 2010

ஐபிஎல் தத்துவம்: மனித வாழ்க்கையும் மங்கூஸ் பேட்டும்


தேவை 20 ரன்
போடுவது கடைசி ஓவர்
சுவரை இறக்கலாமா?

நோபால் வீசிவிட்டு
அம்பயரிடம் கேட்கலாமா
ஹௌ இஸ் தட்?

பஞ்சாப் வைத்தியம் இல்லை
என்பதால் சீயர் லீடர்களிடம்
டேட்டிங் கேட்கலாமா?

பிஃப்டி அடிக்காமல்
செஞ்சுரி அடிக்க
வழி தேடலாமா?

வீசாத ஓவரை
மெய்டன் ஓவர் என்பது
ஓவராகாதா?

ஆர்சி அடித்தால்
மப்பு வரும்.
ரன்கூட வருமா?

போதி மரத்துக் குச்சியால்
பல் தேய்தால்
ஞானம் வந்திடுமா?

...
..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக