செவ்வாய், 16 மார்ச், 2010

ஐபிஎல் ஜோசியம்: பாவம் கிங்ஸ் லெவன்!

குடுகுடுப்பை பெரும் மனக் கஷ்டத்தில் இருக்கிறார். என்ன சொன்னாலும் அவருக்கு எஸ்எம்எஸ் விவகாரமே அவரது உச்சந் தலையில கிர்ருங்குது. எப்படியும் அவருக்கு ஒருவாரம் லீவ் தேவைப்படும். அதனாலே புறா ஜோஸ்யம் பாக்கற ஒருத்தர் மூலமா நவீன முறையில் ஐபிஎல் ஆட்டங்களைக் கணித்துச் சொல்வதற்கு பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது.

புறாக் கணிப்பு தவறாகி்ப் போனால்... மகா ஜனங்கள் தங்களது கோபத்தை புறாமீதுதான் காட்ட வேண்டும். முன்பே செய்து கொண்டிருக்கும் ஒப்பந்தப்படி லெக்பீஸ் கம்பெனிக்குச் சொந்தம்.

இன்னிக்கு ஐபிஎல் போட்டியில ரெண்டு தோத்த டீம் ஆடுறாங்க...  அதான் கிங்ஸ் லெவன், ராயல் சேலஞ்சர்ஸ்... மல்லையா டீம்ல காலிஸ் ஃபார்ம்ல இருக்கார். டிராவிட், கும்ளேவெல்லாம் கணிக்க முடியாது... இருந்தாலும் சவுத்தாப்பிரிக்கா சப்போர்ட் முழுமையா இருக்கு. பெங்களூர்ல மேட்ச் நடக்கறதாலயும். கிங்ஸ் லெவன் டீம்ல யாரு பார்ம்ல இருக்காங்கன்னு தெரியலங்கறதாலயும் மல்லையாவுக்குத்தான் இன்னிக்கு மாலை...

ஏற்கெனவே நடந்த 6 போட்டிகளில் 5 போட்டிகள் நாம் சொல்லிய முடிவைத்தான் எட்டின. இது குடுகுடுப்பைக்குக் கிடைத்த வரம். அவர் விரைவில் பயம் தெளிந்து வர வேண்டும் எனப் பிரார்த்திக்கவும்.

அதேபோல, விளம்பரம் போட ஓவர் முடியும்வரை ஏன் காத்திருக்க வேண்டும் என ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பே ஐடியா கொடுத்ததற்கு மோடி தரப்பில் நமக்குப் பாராட்டுக் கிடைத்தது. இப்போது ஒவ்வொரு பந்துக்கும் இடையே விளம்பரம் போடுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதைச் சுட்டிக்காட்டி மெயில் அனுப்பிய, பின்னூட்டம் இட்ட அனைவருக்கும் நன்றி...

.............

...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக