திங்கள், 18 மார்ச், 2013

ஐ.பி.எல். கவுன்டவுன்: சங்ககார என்ன, புத்த பிக்குவா?



"இலங்கையில் 30 ஆண்டுகளாக நீடித்த பயங்கரவாதம் இப்போதுதான் முடிவுக்கு வந்திருக்கிறது. போரின்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை ராணுவம் மனிதாபிமான உதவிகளைச் செய்தது.
போர்முனைக்குச் சம்பந்தமே இல்லாத கொழும்பு போன்ற நகரங்களில் அப்பாவிகளைக் குறிவைத்து தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன; குண்டுகள் வீசப்பட்டன. இதுபோன்ற பயங்கரவாதச் செயல்களை முறியடித்து வெற்றி பெற்ற ராணுவத்துக்கு வாழ்த்துகள்! "


இதைப் பேசியது யார் தெரியுமா? சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் குமார சங்ககாரதான். 2011-ம் ஆண்டு லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த கௌட்ரி நினைவு உரையில் அவர் பேசியதுதான் இது.

இப்படிப் பேசியவரைத்தான் நம்மூர்க்காரர் ஒருவர் பல கோடிகளைக் கொடுத்து அணியின் தலைவராக நியமித்துள்ளார்.

இது மட்டுமல்ல இவரைப் போல மொத்தம் 13 பேர் ஐ.பி.எல். அணிகளில் உள்ளனர்.

மஹில ஜெயவர்த்தன டேர்டெவில்ஸ் அணியின் கேப்டன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வேகப் பந்துவீச்சாளர் குலசேகர இருக்கிறார்.

புணே வாரியர்ஸில் அஜந்தா மெண்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ்.

ராயல் சேலஞ்சர்ஸில் தில்ஷன், முத்தையா முரளி தரன் (இவர என்ன பண்றது?)

மும்பையில் லசித் மலிங்கா.

ஆக ஏழு அணிகளில் மொத்தம் 13 பேர்.

சென்னையில் நடக்கும் 16 போட்டிகளிலும் ஏதாவது ஒரு இலங்கை வீரர் ஆட இருக்கிறார். ஆக இலங்கை வீரர்கள் இல்லையெனில் ஐ.பி.எல். போட்டியே பணாலாக வாய்ப்புள்ளது.

இனப்படுகொலைக்கு நீதி கேட்பது முக்கியமா? அல்லது சங்காரவின் கவர் டிரைவ்களையும், மலிங்காவின் யார்க்கர்களையும், மெண்டிஸின் சுழலையும் பார்த்து ரசிப்பது முக்கியமா என்று முடிவெடுக்க முடியாத குழப்பமான நிலை பலருக்கு ஏற்பட்டுள்ளது. ஐ.பி.எல். நடக்கவில்லை என்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமே, என்ன செய்வது?

இன்னொரு பக்கம் சோ கால்டு "ஈழ ஆதரவு அரசியல்வாதிகள்" ஐபிஎல் ஓனர்களுடன் பேரம் பேசத் தொடங்கியிருப்பார்கள் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டேன். நானும் நம்ப மாட்டேன்.

போகட்டும். மற்ற போராட்டக்காரர்கள் என்ன செய்வார்கள்?

ஓட ஓட விரட்ட சங்ககாரவும், மெண்டிஸும் புத்த பிக்குகளா என்ன?

..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக