திங்கள், 17 ஜனவரி, 2011

நொண்டியடிக்குது பிசிசிஐ அணி

சென்னையில் இருக்கும் நமக்கெல்லாம் எந்த வகையிலும் பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கவில்லை. முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஸ்ரீகாந்துக்கு மட்டும் சென்னையில் நிறைய பாசிட்டிவ் எனர்ஜி கிடைத்திருக்கிறது. பிசிசிஐ அணியைத் தேர்வு செய்திருப்பது பற்றி என்ன கேள்வி கேட்டாலும் பாசிட்டிவ் எனர்ஜியைப் பற்றித்தான் பேசுகிறார் அவர். இந்த அணி ஜெயிக்கும், வேறொன்றும் சொல்ல முடியாது என்கிறார். 

சரி அப்படி என்னதான் பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறது என்று பார்ப்போம். முதலில் எல்லா வடைகளையும் தாமே விழுங்கி ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் சச்சின் தெண்டுல்கருக்கு உடம்பு சரியில்லையாம். நல்ல பாசிட்டிவ் எனர்ஜிதான். அப்புறம் பிரவீண் குமார் வருவாரா மாட்டாரா என்று தெரியவில்லையாம். இதுதான் பாசிட்டிவ் எனர்ஜி நம்பர் டூ. அடுத்தது சேவக்கும், கம்பீரும் எப்ப வேணும்னாலும் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்குவாங்களாம். இதுதான் பாசிட்டிவ் எனர்ஜி நெம்பர் த்ரீ. அடுத்தது, எப்படி அடிபட்டாலும் தாமே கீப்பராக இருப்பேன் என்று வம்படியாக இருக்கும் தோனிதான் பாசிட்டிவ் எனர்ஜி நம்பர் நாலு. அப்புறம் என்னென்னே தெரியாத பியூஷ் சாவ்லா மர்மம்தான் பாசிட்டிவ் எனர்ஜி நெம்பர் அஞ்சு.

இந்த 5 பாசிட்டிவ் எனர்ஜிக்களைத்தான் ஸ்ரீகாந்த் சொல்கிறார் போலும். எப்படியும் ஜெயிக்கும்னு இவரு சொல்வதைப் பார்க்கும்போது, 2007-ம் ஆண்டு வீறு கொண்டு எழுந்து வெஸ்ட் இண்டீஸுக்கு சென்ற டிராவிட் தலைமையிலான பிசிசிஐ அணிதான் நினைவுக்கு வருகிறது. அந்த ஆண்டில் இந்தியா இருந்தது மிக எளிமையான பிரிவு. வங்கதேசம், இலங்கை, பெர்முடா அணிகள் மட்டும்தான் எதை வேண்டுமானலும் எத்தனை ரன் வித்தியாசத்தில் வேண்டுமானாலும் தோற்கடிக்கலாம். முதல் போட்டியிலேயே வங்கதேசத்திடம் மண்ணைக் கவ்வினார்கள். ரெண்டாவது போட்டியில் பெர்முடா டவுசரைக் கிழித்தார்கள். மூன்றாவது போட்டியில் தோற்றால் வீட்டுக்கு வந்துவிடலாம் என்கிற நிலை இருந்தபோது இலங்கையிடம் வேட்டியைப் பறிகொடுத்துவிட்டு வீட்டுக்கு வந்தார்கள்.


தோற்றுப் போன இரண்டு போட்டிகளிலும் முட்டை ரன்கள் எடுத்த ஒரு வீரர் இருக்கிறார். அவர் யார் தெரியுமா? இன்று பாசிட்டிவ் எனர்ஜிகளுக்குத் தலைமையேற்று கோடிகளைக் குவிக்கும் தோனிதான் அவர். அன்று முட்டைகளை எடுத்ததற்காக கிரிக்கெட் தேச பக்தர்கள் ஒன்று திரண்டு அவரது வீட்டை அடித்து நொறுக்கினார்கள். செருப்பு மாலை போட்டார்கள். படங்களைக் கொளுத்தினார்கள். அதை இன்னும் அவர் மறந்திருக்க மாட்டார்.


இந்த முறை என்னுடைய வேண்டுகோள் ஒன்றேயொன்றுதான். இனிமேல் செருப்பு மாலைகளுக்கு பேட்டா செருப்புகளையோ, ரீபோக் ஷூக்களையோ மட்டும் பயன்படுத்துங்கள்.
.
.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக