ஞாயிறு, 2 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 48 - கிரிக்கெட் கஞ்சர்

20-20 யுகத்தில் ரன்னே எடுக்காத ஓவர் என்பது மிகவும் அரிது. பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ஒருநாள் போட்டிகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 2 முதல் 5 ஓவர்கள் வரை ரன் எடுக்காத ஓவர்களாக இருந்திருக்கின்றன. கபில்தேவ், மெக்டர்மாட், அம்புரோஸ், வால்ஷ், ஆலன் டொனால்டு போன்றவர்கள் தொடக்க ஓவர்களை மெய்டன்கள் மாற்றுவதல் வல்லவர்கள். 1996-க்கு முன்பு இலங்கையின் அதிரடித் தொடக்க உத்தி அறிமுகமாவதற்கு முன்பு வரை ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஓவர்கள் சில மெய்டன்களாக ஆவது கிட்டத்தட்ட ஒரு வழக்கம் போலவே இருந்தது.


1963-1964 ல் சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் நம்மூர்க்காரர் ஒருவர் தொடர்ந்து 21 ஓவர்களை மெய்டன்களாக வீசியிருக்கிறார். ரன்னே கொடுக்காமல் அவர் தொடர்ந்து வீசிய பந்துகளின் எண்ணிக்கை 131. 

கிரிக்கெட் உலகில் கஞ்சர் எனப் பெயரெடுத்த அந்த வீரர் நட்கர்னி. மகராஷ்டிரத்தைச் சேர்ந்த அவர் ரன்களைக் கட்டுப்படுத்துவதில் வல்லவர். மேலே சொன்ன அந்த இன்னிங்ஸில் மட்டும் 27 மெய்டன் ஓவர்களை நட்கர்னி வீசியிருக்கிறார். அதே இன்னிங்ஸில் மற்றொரு இந்தியரான போர்டே 30 மெய்டன்களை வீசியிருக்கிறார். அந்த அளவுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் நிதானமாக ஆடியிருக்கிறார்கள். டிராவான அந்த மேட்சின் முதல் இன்னிங்ஸில்தான் இந்தக் கூத்து நடந்திருக்கிறது.

அந்த பவுலிங் விவரம்


Bowling O M R W Econ


VB Ranjane 16 2 46 1 2.87


ML Jaisimha 7 3 16 0 2.28


CG Borde 67.4 30 88 5 1.30


SA Durani 43 13 97 3 2.25


RG Nadkarni 32 27 5 0 0.15


AG Kripal Singh 25 10 52 1 2.08



..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக