புதன், 5 ஜனவரி, 2011

உலகக் கோப்பை 2011 கவுன்டவுன் 45: ஸ்ரீசாந்துக்கு வாய்ப்பில்லை?

உலகக் கோப்பை உத்தேச அணியில் ஸ்ரீசாந்த் இருக்கிறார். தற்போது டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் நடைபெற்றுவரும் டெஸ்ட் போட்டியிலும் இவருக்கு மவுசு கூடியிருக்கிறது. முதல் இன்னிங்ஸில் 5விக்கெட்டுகளை அள்ளி தென்னாப்பிரிக்காவை நிலைகுலையச் செய்தார். ஆனால், டிரஸ்ஸில் ரூமில் ஸ்ரீசாந்துக்கு அவ்வளவு மரியாதை இல்லை. ஆளாளுக்கு அவரை ஏளனம் செய்கிறார்கள்.

இந்த ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே, "ஒரு ஓவரை 6நிமிடங்கள் வீசினால் உன்னைத் தொலைத்து விடுவேன்" என்று தோனி எச்சரித்திருக்கிறார். தோனியின் திட்டால் நொந்து போயியிருந்த ஸ்ரீசாந்த் முதல் இன்னிங்ஸில் அருமையாகப் பந்துவீசியதும் தோனியிடம் இருந்து பாராட்டைப் பெறலாம் என்று நினைத்தார். ஊகூம். பழைய மரியாதையே தொடர்ந்தது.

இந்த லட்சணத்தில் களத்தில் ஸ்மித்தின் அம்மாவைக் கெட்டவார்த்தையில் திட்டியதாக ஸ்ரீசாந்த் மீது புகார் வந்தது. உன் வேலையைப் பார் என்று ஸ்மித் கூறிவிட்டதாகவும், ஆனாலும் திட்டுவதை ஸ்ரீசாந்த் விடவில்லை எனவும் கூறுகிறார்கள்.

4-ம் நாள் ஆட்டத்தில் இன்னொரு கூத்து நடந்தது. நம்ம ஸ்ரீசாந்த் குழந்தைபோல கேவிக் கேவி அழுதார். எதற்கென்று கேட்கிறீர்களா? இவரது திட்டியதைப் பொறுக்க மாட்டாமல் பவுன்டரியில் ஃபீல்ட் செய்து கொண்டிருந்த இவர் மீது தென்னாப்பிரிக்க ரசிகர்கள் காலி வாட்டர் பாட்டிகளையும் இன்னபிற சங்கதிகளையும் வீசியிருக்கிறார்கள்.

வழக்கம் போல "அவன் அடிச்சிட்டான் சார்" என் அம்பயரிடம் ஸ்ரீசாந்த் கூறியிருக்கிறார். அப்போது சீனுக்கு வந்த தோனி, ஸ்ரீசாந்த்தின் புகாரைக் கேட்டு கேலியாகச் சிரித்திருக்கிறார். இதெல்லாம் கேமராவில் பதிவாகியிருக்கிறது. நம்மூர் 24 மணி நேர நகைச்சுவைச் செய்திச் சேனல்கள் இதை ஒளிபரப்பிக் கொண்டேயிருந்தன. தோனிக்கும் ஸ்ரீசாந்துக்கும் பகை என்பதுபோல.

ஸ்ரீசாந்துக்கு நாம் கூறும் அறிவுரை இதுதான். உத்தேச அணியில் இருக்கும் யுவராஜ் போன்றோருக்கே உலகக் கோப்பை அணியில் இடம் இல்லை என்று பரவலாகக் கூறப்படுகிறது. இப்போது தோனியைப் பகைத்துக் கொள்வது சரியில்லை. காலம் வரும்போது ஒரு கை பார்க்கலாம். அதைவிட்டுவிட்டு கதறி அழுது, உமது வாய்ப்பை நீரே கெடுத்துக்கொள்ள வேண்டுமா?

.

1 கருத்து:

  1. //அப்போது சீனுக்கு வந்த தோனி, ஸ்ரீசாந்த்தின் புகாரைக் கேட்டு கேலியாகச் சிரித்திருக்கிறார்//

    ??

    பதிலளிநீக்கு