வியாழன், 3 மார்ச், 2011

உலகக் கோப்பைக்கு முன்பு சூதாட்டக்காரர் விடுதலை! என்ன செய்து கொண்டிருப்பாரோ?


இது பழைய செய்தி! 10 ஆண்டுகளுக்கு முந்தையது
 
மேட்ச் பிக்ஸிங் தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளியாகத் தேடப்பட்டு வந்த புக்கி முகேஷ் குப்தா, சிபிஐஅதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது கிரிக்கெட் சூதாட்டத்தில்ஈடுபட்டதாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் குரோனியே மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து அணியிலிருந்து குரோனியே நீக்கப்பட்டார். அவர் மீதான குற்றச்சாட்டை விசாரிக்க நீதிபதி எட்வர்ட்கிங் தலைமையில் தனி விசாரணைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. கமிஷன் முன் ஆஜரான குரோனியேவிடம்குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது இந்தியாவைச் சேர்ந்த புக்கி முகேஷ் குப்தா என்னை சந்தித்து லஞ்சம் கொடுத்தார். அவரை என்னிடம்அறிமுகப்படுத்தியது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன்தான் என்று குரோனியே கூறினார்.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டனரா என்று விசாரித்து வரும் மத்திய புலனாய்வுப்பிரிவு (சிபிஐ), முகேஷ் குப்தாவைக் கைது செய்ய முயற்சி மேற்கொண்டது. ஆனால், அதைக் கேள்விட்ட பிறகுமுகேஷ் குப்தா தனது குடும்பத்தினருடன் தலைமறைவாகிவிட்டார்.
முகேஷ் குப்தா கைது செய்யப்பட்டால்தான் கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்றநிலையில் அவரைக் கைது செய்யும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந் நிலையில், தில்லியில் மறைந்திருந்த முகேஷ் குப்தாவை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை கைது செய்தனர்.பின்னர் அவரை தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து வந்து சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக பல உண்மைகளை சிபிஐ அதிகாரிகளிடம் முகேஷ் குப்தா கூறியுள்ளதாகத்தெரிகிறது. கிரிக்கெட் சூதாட்ட வழக்கில் தேடப்பட்ட முக்கிய குற்றவாளி முகேஷ் குப்தா கைது செய்யப்பட்டதைஅடுத்து அவ் வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விரைவில் பல உண்மைகள் வெளிவரும் என்று சிபிஐஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுவும் பழைய செய்தி!

கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடமிருந்து லஞ்சம் வாங்கத் தூண்டப்பட்டேன். அப்போதுநான் குழப்பமான மனநிலையில் இருந்தேன் என்று தென் ஆப்பிரிக்க அணியின்முன்னாள் கேப்டன் ஹான்ஸி குரோனியே தெரிவித்தார்.மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக குரோனியே மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.இதையடுத்து தென் ஆப்பிரிக்க கேப்டன் பொறுப்பிலிருந்தும் அணியிலிருந்தும் அவர்நீக்கப்பட்டார்.

அவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க நீதிபதி எட்வின் கிங்தலைமையில் தனி விசாரணை கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது.விசாரணைக் கமிஷன் முன் ஆஜரான குரோனியேவிடம் கேள்விகள்கேட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது குரோனியே கூறியது:

5 ஆண்டுகளுக்கு முன் என்னை கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் அணுகினர். எனக்குபண ஆசை காட்டி என்னைத் தூண்டினர். சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம்பெற்றதை நினைத்து இப்போது நான் வருந்துகிறேன். சூதாட்டக்காரர்களிடமிருந்து 5.8 லட்சம் டாலர் லஞ்சமாக வாங்கியிருக்கிறேன்.சூதாட்டக்காரர்கள் என்னிடம் வந்து பேசி ஆசை காட்டியதால் குழப்ப மனநிலையில்லஞ்சம் வாங்கிக் கொள்ள நான் தூண்டப்பட்டேன் என்பதே உண்மை.லஞ்சம் கொடுக்க சூதாட்டக்காரர்கள் முன் வந்தபோது அவர்களை திட்டிஅனுப்பியிருக்கலாமோ என்று இப்போது நான் கருதுகிறேன். ஆனால், அப்போது நான்அவ்வாறு செய்யவில்லை.
அப்போது நான் மறுத்திருந்தால் இப்போது எனக்கு இந்தநிலை வந்திருக்காது. சூதாட்டக்காரர்களிடமிருந்து பணம் வாங்கியது உண்மை. ஆனால், மேட்ச் பிக்ஸிங்கில்ஒருபோதும் நான் ஈடுபடவில்லை. 1995-ம் ஆண்டு முதல் இதுநாள் வரைகிளிஃப்போர்டு கிரீன் என்ற ஏஜெண்டு மூலம் ஸ்பான்சர்ஷிப் மற்றும்என்டார்ஸ்மென்டுகளுக்காக மட்டும்தான் நான் பணம் பெற்றேன். 1996-ம் ஆண்டு, இந்தியாவில் முகேஷ் குப்தா என்பவரை அசாருதீன் ஒரு ஹோட்டல்அறையில் எனக்கு அறிமுகப்படுத்தினார். முதலில் தன்னை அவர் ஒரு நகைக்கடைஉரிமையாளர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். ஆனால், பின்னர்தான் அவர்மேட்ச் பிக்ஸிங் செய்யும் சூதாட்டக்காரர் என்று தெரிந்தது.தென் ஆப்பிரிக்க அணியைச் சேர்ந்த ஒரு வீரருக்காக முகேஷ் குப்தாவிடம் பணம்வாங்கிக் கொண்டு என்னால் முடிந்ததைச் செய்வதாகக் கூறினேன். அதுதான் நான்செய்த பெரிய தவறு. பணம் வாங்கியது பற்றி அணி வீரர்கள் யாரிடமும்தெரிவிக்கவில்லை. பணத்தை நானே வைத்துக் கொண்டேன். அந்த போட்டியில் தென்ஆப்பிரிக்கா தோற்றுவிட்டது.அந்த ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்காவில் இந்திய கிரிக்கெட் அணிசுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போதும் தென் ஆப்பிரிக்கா வந்த முகேஷ் குப்தா டர்பன் மற்றும் கேப் டவுனில் போட்டிகள் தொடங்கப்படுவதற்கு முன் அப் போட்டிதொடர்பான தகவல்களைப் கேட்டார் என்றார் குரோனியே.


இது சூதாட்ட டைம்லைன்

மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அதிகாரிகளால்கூறப்பட்ட குற்றச்சாட்டுகளால் இந்திய கிரிக்கெட் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

முதன் முதலாக இத்தகைய குற்றச்சாட்டைக் கூறியது இந்திய கிரிக்கெட் அணியின்முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர். அதன் பிறகு பல்வேறு சமயங்களில் பல்வேறு வீரர்கள்,கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இதையடுத்து இது குறித்து விசாரணை நடத்தும்படி சிபிஐக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.கடந்த 6 மாதம் தீவிரமாகவும், விரிவாகவும், முழுமையாகவும் விசாரணை நடத்தியசிபிஐயின் விசாரணை அறிக்கை புதன்கிழமை வெளியிடப்பட்டது.

மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு கூறப்பட்டதிலிருந்து இப்போது சிபிஐ அறிக்கைவெளியிடப்பட்டது வரை நடந்த சம்பவங்கள் விவரம் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. அதன்விவரம்:

ஆண்டு 2000.

ஏப்ரல் 7 : மேட்ச் பிக்ஸிங் ஊழலை டெல்லி போலீஸார் வெளிப்படுத்தினர். தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் குரோனியோ உள்பட மேலும் 3 தென் ஆப்பிரிக்க வீரர்கள்மீதும் இரண்டு இந்திய கிரிக்கெட் சூதாட்டக்காரர்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு.
ஏப்ரல் 28: மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவிருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அறிவிப்பு.

ஏப்ரல் 30: மேட்ச் பிக்ஸிங் குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்காக ஸ்காட்லாந்து யார்டுபோலீஸார் இந்தியா வருகை. சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவு.

மே 1: மேட்ச் பிக்ஸிங் குறித்து வழக்குப் பதிவு செய்து சிபிஐ தனது முதற்கட்டவிசாரணையைத் தொடங்கியது.

மே 4: கபில்தேவ் தனக்கு ரூ. 25 லட்சம் கொடுக்க முன் வந்ததாக மனோஜ் பிரபாகர்தன்னிடம் கூறியதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர்பிந்த்ரா தகவல். இக் குற்றச்சாட்டை மறுத்தார். செய்தியாளர் கூட்டத்தில் கண்ணீர் விட்டார்கபில்தேவ்.

மே 6: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு லஞ்சம் கொடுக்கமுன் வந்தது உண்மை என்று மனோஜ் பிரபாகர் அறிவித்தார். ஆனால், பெயரைஅறிவிக்கவில்லை.

மே 11: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக கபில்தேவ் தொடர இந்தியகிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு.

மே 12: சிபிஐ வெளி நபர்களிடம் தனது விசாரணையைத் தொடங்கியது.

மே 13: விசாரணைக்கு வரும்படி மனோஜ் பிரபாகருக்கு சிபிஐ உத்தரவு.

மே 15: சிபிஐ முன் பிந்த்ரா ஆஜராகி வாக்குமூலம் கொடுத்தார். 360 பக்கஅறிக்கையையும் சிபிஐயிடம் அவர் சமர்ப்பித்தார்.

மே 16: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கையை சிபிஐ ஆராய்ந்தது. இந்திய கிரிக்கெட்கட்டுப்பாட்டு வாரியம் செயல்படும் விதம் குறித்த தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியதுசிபிஐ.

மே 18: பிந்த்ரா சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக எழுந்த கேள்விகளுக்கு விளக்கம்அளிக்கும்படி பிந்த்ராவுக்கு சிபிஐ கோரிக்கை.

மே 20: இந்திய அணியின் முன்னாள் மேலாளர் அஜித் வடேகரிடம் மும்பையில் சிபிஐவிசாரணை.

மே 22: சிபிஐ முன் ஆஜராக கால அவகாசம் கோரினார் மனோஜ் பிரபாகர்.

மே 23: சிபிஐ முன் நவ்ஜோத் சிங் சித்து ஆஜராகி வாக்குமூலம். பிந்த்ரா கூறிய தகவல்குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்றார்.

மே 24: சிபிஐ முன் மனோஜ் பிரபாகர் ஆஜரானார். இன்டர்நெட் தளத்துக்குபேட்டியளித்தார். கபில்தேவ் தனக்கு லஞ்சம் கொடுக்க முன் வந்தது உண்மை என்றுதெரிவித்தார். இதற்கு மோங்கியா, சித்து, பிரசாந்த் வைத்தியா ஆகியோர் சாட்சி என்றார்.மேலும் அச் சம்பவம் பற்றி அசாருதீன், ரவி சாஸ்திரி, அஜீத் வடேகர், கவாஸ்கர்ஆகியோருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

மே 25: கபில்தேவ் லஞ்சம் கொடுக்க முன் வந்தது பற்றி என்னிடம் பிரபாகர் கூறினார்என்று ரவி சாஸ்திரி லண்டனில் தெரிவித்தார். மற்றவர்கள் அச் சம்பவம் பற்றி தெரியாதுஎன்று கூறிவிட்டனர்.

மே 28: மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்தார் பிரபாகர். இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்,பெட்டிங் குறித்து கிரிக்கெட் வீரர்களிடம் எடுத்த பேட்டி அடங்கிய விடியோ கேசட்டைவெளியிட்டார். அசார், ஜடேஜா ஆகியோருக்கு கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புஇருப்பது தெரியவந்தது.

மே 30: மும்பை, டெல்லி நகரங்களில் உள்ள கிரிக்கெட் சூதாட்டக்காரர்களிடம் சிபிஐவிசாரணை.

ஜூன் 2: கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின்வங்கிக் கணக்குகளைப் பரிசோதிக்க சிபிஐ முடிவு.

ஜூன் 3: தன்னிடமிருந்து விடியோ கேசட்டுகளை சிபிஐயிடம் மனோஜ் பிரபாகர்ஒப்படைத்தார்.

ஜூன் 5: விடியோ கேசட்டுகளை சிபிஐ பரிசோதித்தது.

ஜூன் 9: பிரபாகர் பேட்டி எடுத்த கிரிக்கெட் வீரர்களுக்கு சிபிஐ சம்மன். விசாரணைக்குவரும்படி அழைப்பு.

ஜூன் 11: கிரிக்கெட் வீரர் அஜய் சர்மா இந்தியாவில் மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதற்கானமுக்கிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சிபிஐ தகவல்.

ஜூன் 12: சித்து மீண்டும் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகர் கூறியகுற்றச்சாட்டுகள் குறித்தும், விடியோ கேசட்டில் இருப்பது குறித்தும் விளக்கம் அளித்தார்.

ஜூன் 13: விக்கெட் கீப்பர் நயன் மோங்கியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.பிரபாகரின் குற்றச்சாட்டை மறுத்தார்.

ஜூன் 15: முகேஷ் குப்தா என்ற கிரிக்கெட் சூதாட்டக்காரரிடம் என்னை முதன் முதலாகஅறிமுகப்படுத்தியது அசாருதீன்தான் என்றார் குரோனியே.

ஜூன் 16: குப்தா பற்றி தகவல்களைச் சேகரித்தது சிபிஐ. தெற்கு டெல்லியில் நகைக் கடைவைத்திருப்பவர்தான் குப்தா என்று சிபிஐ கண்டுபிடித்தது.

ஜூன் 19: பிரசாந்த் வைத்தியா சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம். பிரபாகரின்குற்றச்சாட்டை மறுத்தார்.

ஜூன் 20: சிபிஐ முன் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார் அஜித் வடேகர்.தன்னிடம் பிரபாகர் பேசியது எதுவும் நினைவில்லை என்று மறுத்தார்.

ஜூன் 22: அசாருதீனிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் தனக்குத்தொடர்பில்லை என்று மறுத்தார் அசாருதீன்.

ஜூன் 28: கிரிக்கெட் சூதாட்டக்காரர் முகேஷ் குப்தா பிடிபட்டார். அவரிடம் வாக்குமூலம்பெற்றது சிபிஐ.

ஜூன் 29: நிகில் சோப்ராவிடம் சிபிஐ விசாரணை. மேட்ச் பிக்ஸிங்கில் ஈடவில்லை என்றுமறுத்தார் நிகில் சோப்ரா.

ஜூலை 1: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பிசியோதெரபிஸ்ட் அலிஇராணியிடம் சிபிஐ விசாரணை.

ஜூலை 4: பிரபாகரிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. அவர் கொடுத்த விடியோ கேசட்டுகள்உண்மையானதுதானா என்று பிரபாகரிடம் விளக்கம் கேட்டது சிபிஐ.

ஜூலை 16: அஜய் ஜடேஜாவிடம் சிபிஐ விசாரணை.

ஜூலை 20: கிரிக்கெட் வீரர்கள், வாரிய அதிகாரிகள், கிரிக்கெட் சூதாட்டக்காரர்களில்வீடுகளில் வருமான வரித் துறையினர் ஒரே நேரத்தில் சோதனை.

ஜூலை 22: வருமான வரித் துறை சோதனை தொடர்ந்தது. வங்கி லாக்கர்கள்சீலிடப்பட்டன. ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வருமான வரித் துறைஅதிகாரிகளுடன் சேர்ந்து சிபிஐ அதிகாரிகளும் ஆவணங்களைப் பரிசோதித்தனர்.

ஜூலை 24: அஜய் சர்மாவிடம் விசாரணை நடத்துவதற்காக இரண்டு பேர் கொண்ட சிபிஐகுழு லண்டன் சென்றது. ஸ்காட்லாந்து யார்டு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

ஜூலை 28: அஜய் சர்மாவிடம் சிபிஐ குழு விசாரணை. கிரிக்கெட் வீரர்களுக்கும்,சூதாட்டக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதற்கான தகவல்கள் கிடைத்தன.அசாருதீனுக்கும் சூதாட்டக்காரர்களுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக அஜய்சர்மா தெரிவித்தார்.

ஆகஸ்ட் 1: ஜடேஜா, கபில்தேவ் ஆகியோரது வங்கி லாக்கர்களைத் திறந்து சிபிஐசோதனை.

ஆகஸ்ட் 4: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஏ.சி. முத்தையா, செயலர்லேலே, பொருளாளர் கிஷோர் ருங்தா ஆகியோர் சிபிஐ முன் ஆஜராகி வாக்குமூலம்.

ஆகஸ்ட் 14: முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராகவும்உள்ள ரவி சாஸ்திரியிடம் சிபிஐ விசாரணை. பிரபாகரின் குற்றச்சாட்டை ஆமோதித்தார்.

ஆகஸ்ட் 16: வருமான வரிச் சோதனையின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களைபரிசோதனை செய்தது சிபிஐ.

ஆகஸ்ட் 17: கிரிக்கெட் வாரியப் பொருளாளர் ருங்தா சிபிஐ முன் மீண்டும் ஆஜராகிவாக்குமூலம்.

ஆகஸ்ட் 18: மேட்ச் பிக்ஸிங் பற்றி ஒரு வழக்கோ அல்லது முதல் தகவல் அறிக்கையோபதிவு செய்யப்படாது, விசாரணை முடிந்தவுடன் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம்சமர்ப்பிக்கப்படும் என்று சிபிஐ அறிவித்தது.

ஆகஸ்ட் 31: அஜய் சர்மாவிடம் சிபிஐ மீண்டும் விசாரணை. பொய் கண்டறியும்சோதனையில் ஈடுபடும்படி மனோஜ் பிரபாகரிடம் சிபிஐ கோரிக்கை. ஆனால், அச்சோதனையில் ஈடுபட மனோஜ் பிரபாகர் மறுப்பு. மற்றவர்களுக்கும் அச் சோதனைநடத்தப்படவேண்டும் என்றார் அவர்.

செப்டம்பர் 7: சிபிஐ முன் ஆஜரானார் கபில்தேவ். தன் மீதான குற்றச்சாட்டுகளைமறுத்தார்.

செப்டம்பர் 12: இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்கபில்தேவ்.

செப்டம்பர் 15: சிபிஐ அறிக்கையில் ஓரிரு இந்திய கிரிக்கெட் வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக சிபிஐ இயக்குநர் ஆர்.கே. ராகவன் சூசகத் தகவல்.

செப்டம்பர் 16: மாதக் கடைசியில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும்என்று சிபிஐ தெரிவித்தது.

செப்டம்பர் 17: தென் ஆப்பிரிக்காவில் மேட்ச் பிக்ஸிங் பற்றி விசாரித்து வரும் எட்வர்ட்கிங் கமிஷனின் வழக்கறிஞர் ஷாமிலா பதோஹி விசாரணை நடத்துவதற்காக இந்தியாவந்தார்.

செப்டம்பர் 19: டெல்லி போலீஸாருடன் ஷாமிலா பதோஹி ஆலோசனை.

செப்டம்பர் 20: சிபிஐ உயர் அதிகாரிகளுடன் ஷாமிலா பதோஹி சந்திப்பு.

செப்டம்பர் 22: மத்திய அரசிடம் சிபிஐ விசாரணை அறிக்கை சமர்ப்பிப்பு தள்ளிவைப்பு.

அக்டோபர் 3: இம் மாதத்தில் விசாரணை அறிக்கை மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்என்று சிபிஐ அறிவிப்பு.

அக்டோபர் 10: மாதத்தின் மூன்றாவது வாரத்தில் சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்று ஏஜென்சி செய்திகள் தெரிவித்தன.

அக்டோபர் 20: அக்டோபர் 23-ம் தேதி விசாரணை அறிக்கை தாக்கலாகும் என்று சிபிஐஅறிவிப்பு.

அக்டோபர் 23: விசாரணை அறிக்கை தாக்கல் செய்வது தள்ளிவைப்பு.

அக்டோபர் 30: மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக சிபிஐயின் விசாரணை அறிக்கை மத்தியஅரசிடம் சமர்ப்பிப்பு.

அக்டோபர்  31: பிரையன் லாரா, அலெக் ஸ்டூவர்ட், மார்ட்டின் குரோ, அரவிந்த டி சில்வா, சலீம் மாலீக் மீது குப்தா குற்றச்சாட்டு

நவம்பர் 1: சிபிஐ விசாரணை அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டது. அசாரூதீன் மீது குற்றச்சாட்டு

டிசம்பர் 5: அசாருதீனுக்கு வாழ்நாள் தடை, அஜய் ஜடேஜாவுக்கு 5 ஆண்டு தடை, அஜய் சர்மா, பிரபாகர், வைத்தியர் அலி இரானி போன்றோருக்கும் தடைகள் விதிக்கப்பட்டன.

இது லேட்டஸ்ட்

இந்த மேட்ச் பிக்சிங் ஊழலுக்குக் காரணமான முகேஷ் குப்தா உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குவதற்கு முந்தைய நாள் பிப்ரவரி 18-ம் தேதி தில்லி உயர் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான பெரா குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை. அரசு தரப்பு வழக்கை வாபஸ் பெற்றுக் கொண்டது. அவர் என்ன செய்து கொண்டிருப்பார் என்று யாராவது சொல்ல முடியுமா?
...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக