ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

அதிதீவிர கிரிக்கெட் ரசிகன்

நமது நாட்டில் கிரிக்கெட்டையும் தேசபக்தியையும் பிரிக்கவே முடியாது. அதற்காக, பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு ஆடப்படும் ஐபிஎல், ஐசிஎல் போன்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் நமது தேச பக்தியையும், உள்ளூர் உணர்வுகளையும் கலப்பது முறையல்ல. எட்ட நின்று இந்த ஐபிஎல் போட்டிகளைப் பார்த்தால், அதில் ஒரு நாடகத்தனம் இருப்பதைக் கண்டுகொள்ள முடிகிறது. ஐபிஎல் போட்டிகள் என்பது வெறும் பொழுதுபோக்கு என்பதை நமது கிரிக்கெட் வாரியமே ஒத்துக்கொண்டுவிட்ட பிறகு, அதில் ஆடுவோர் அனைவரும் நடிகர்கள்தான். இடைவெளியில்லாமல் விளம்பரப் படங்களில் நடித்துக் களைத்து, ஆடுகளத்துக்குள் வரும் அவர்களை, வீரர்களாக என்மனம் ஏற்றுக்கொள்ளவில்லை. அந்த வகையில், ஒரு பாமர இந்தியனின் கண்ணோட்டத்தில் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளை ஒருவித நக்கல் நயத்துடன் இங்கே விமர்சிக்கப் போகிறேன். ஒரு அதிதீவிர கிரிக்கெட் ரசிகன் என்ற முறையில் அதற்கு எனக்கு முழு உரிமை உண்டு. என்னுடைய கொடுமையான விமர்சனங்களால் யாரேனும் கவலைப்பட்டால், எந்த அளவுக்குக் கவலைப்பட்டீர்கள் என்பதை மட்டும் எனக்கு தவறாமல் தெரிவித்துவிடுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக