வியாழன், 30 ஏப்ரல், 2009

ஏனிந்த அவசரம் ரெய்னா!

கிரிக்கெட் போட்டிகளில் சுரேஷ் ரெய்னாவைப் போல் பரிதாபகரமான ஒருவரை இதற்கு முன்னால் பார்த்திருக்க முடியாது. ராஜஸ்தான் அணிக்கு எதிராக நன்றாகத்தான் ஆடிக் கொண்டிருந்தார். யார் செய்த சதியோ, அவர் 98 ரன் எடுத்தபோது, ஸ்கோர் போர்டில் 100 எனக் காட்டப்பட்டது. உடனே ஹெல்மெட்டையும் பேட்டையும் தலைக்கு மேலே உயர்த்தி, சூரியனுக்கு டாட்டா காட்டி, ரசிகர்களை நோக்கிப் பெருமிதப் பார்வையும் பார்த்துவிட்டார். அடுத்த பந்தைச் சந்தித்த அவர், 100 ரன்கள் எடுத்துவிட்ட குஷியில் ஏனோதானோவென அசால்ட் கேட்ச் கொடுத்துவிட்டு, பெவிலியனுக்கு ராஜநடையில் வந்தார். அப்போதும், ரசிகர்களை நோக்கி பேட்டை உயர்த்தத் தவறுவதில்லை. வெளியே வந்ததும், மேனேஜர்தான் ரெய்னாவில் தலையில் குட்டி, உண்மையைப் புரியவைத்தார். அடப் பதருகளா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக