ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

ஐசிஎல்-க்கு அங்கீகாரமா? போ... போ...

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒரே எதிரி ஐசிஎல். அந்த அமைப்புடன் தொடர்பு வைத்திருப்பவர்களை செத்த எலியைப் போலப் பார்ப்பதுதான் வாரியத்தின் வழக்கம். இன்னும் கொஞ்சநாள் போனால், ஐசிஎல் போட்டிகளைப் பார்க்கும் ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளைப் பார்க்க முடியாது என்று சட்டம் கூடப் போடுவார்கள். நிலைமை இப்படி இருக்கும்போது ஐசிஎல் அமைப்பு கேணச் செயல் ஒன்றைச் செய்தது. அதாவது ஐபிஎல் அமைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டதுபோல தங்களுக்கும் வழங்க வேண்டும் ஐசிஎல் அமைப்பினர் என்று ஐசிசியிடம் கோரிக்கை வைத்தனர். நீங்கள் சட்ட விரோதமானவர்கள், முறையற்றவர்கள் என ஐசிஎல் அமைப்பினரின் காது நோகும் அளவுக்குத் திட்டி அனுப்பியது ஐசிசி இப்போது ஐசிஎல் அமைப்பினர் மூலையில் உட்கார்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் கடைக்கண் பார்வைப்படி தலையசைப்பது ஒன்றையே லட்சியமாகக் கொண்டுள்ள ஐசிசி, தங்களுக்கு அனுமதி வழங்கும் என இவர்கள் எப்படி நினைத்தார்கள் என்றே தெரியவில்லை. இப்போது கோர்ட்டுக்கு போகப்போகிறார்களாம். போங்கள். போய்ப் பாருங்கள். சூடுதான் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக