செவ்வாய், 28 ஏப்ரல், 2009

ஏழரை யாருக்கு? யாருக்கோ!

உனது சொல்லும் செயலும் அப்படியே என்னைப் போலவே இருக்கிறது என்று வெகு தூரத்தில் இருந்து நண்பர் ஒருவர் போன் செய்து சொன்னார். அப்படியே, இந்த பொறுமையைச் சோதிக்கும் ஏழரை நிமிட இடைவெளியைப் பற்றி ஏதாவது எழுது என கண்ணீர் மல்கக் கேட்டுக் கொண்டார். அந்த ஒரே காரணத்துக்காக, சரி போகட்டும் என்று இதை எழுதுகிறேன்.

ஏழரையால் ரசிகர்களுக்கு என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்று நமது கிரிக்கெட் தொழில்நுட்ப அறிவைப் பயன்படுத்தி யோசிப்பதற்கு முன்னால், இந்த வலுக்கட்டாய இடைவெளி எதற்காகக் கொண்டுவரப்பட்டது என்பதைப் புலன் விசாரணை செய்வோம். வெளிப்படையாகத் தெரிந்த ஒரே காரணம் மோடியின் பாக்கெட்டை நிரப்புவதுதான். இன்னொரு காரணமும் இருக்கிறது. கிரிக்கெட்டை ஒரு விளையாட்டாகக் கருதாமல் ஒரு நாடகமாக, அதாவது டி.வி. சீரியலாக அல்லது சினிமாவாகக் கருத வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார்கள். எப்படி சீரியல்களுக்கு 10 நிமிடங்களுக்கு இடையே விளம்பர இடைவேளை இருக்கிறதோ, அதைப் போலவே இந்தப் போட்டிகளில் 10 ஓவர்களுக்கு இடையே ஒரு ஏழரை.

ஆனால், இந்த இடைவேளையால் ரசிகர்களுக்கு இரண்டு வகை நன்மைகள் ஏற்பட்டிருக்கின்றன. சீரியல் இடைவேளைகளில் என்ன செய்வோமா அதைப்போல இந்த இடைவேளைகளிலும், சாப்பிடுவது, குழந்தைகளைக் கொஞ்சுவது, அலுவலகப் பணி என எதையாவது செய்யலாம். இன்னொரு நன்மை, அந்தப் பத்தாவது ஓவரைக் கடத்திவிட்டால், ஏதோ அடுத்த நாள் ஆட்டத்தில் தெம்பாக விளையாடலாம் என்பதைப் போல பத்தாவது ஓவரை நமது பேட்ஸ்மேன்கள் தேயோ தேய் எனத் தேய்க்கிறார்களே! நல்ல காமெடி. செட் மேக்ஸில் ஆதித்யாவைப் பார்த்த உணர்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக