புதன், 27 ஜூலை, 2011

சச்சினுக்கு தண்டனை கிடையாதா?

 உடல்நிலை சரியில்லாவிட்டால் எந்த ஆட்டத்திலும் சேர்த்துக் கொள்ள மாட்டார்கள். அதுவும் குழுப் போட்டிகள் என்றால் உடல் தகுதியை நிரூபித்தே ஆக வேண்டும். ஏனென்றால் உடல் தகுதி இல்லாத ஒருவருக்குப் பதிலாக வேறொருவரை களமிறக்க முடியும். ஆனால் கிரிக்கெட்டில் மட்டும் நம் ஆள்கள் இந்த விதியை காற்றில் பறக்க விடுகிறார்கள்.

 இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே நமது சச்சின் தெண்டுல்கருக்கு காய்ச்சலாம். ஆனாலும் மைதானத்தில் அவர் இருந்தார். ஏனய்யா காய்ச்சலுடன் ஆடினீர்கள் என்று கேட்டால், "காய்ச்சலையும் பொருள்படுத்தாமல் நாட்டுக்காக ஆடினேன்" என்கிற ரீதியில் பதில் வரும். அவரது பக்தகோடிகள் இதையும் கேட்டு "சல்யூட்" அடிப்பார்கள். சச்சின் இல்லாமல் வேறு யாராவது இருந்திருந்தால் தோனி டீம் இந்தப் போட்டியில் ஜெயித்திருக்கக்கூடும் என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அனில் கும்ளே தலை முழுக்கு கட்டுப்போட்டு வந்து ஒரு போட்டியில் பந்து வீசினார். ஆனால் அதெல்லாம் ஆடுகளத்திலேயே காயம் ஏற்பட்ட காயம். ஆனால், காய்ச்சல் இருக்கிறது எனத் தெரிந்தே ஒருவர் ஆடுகளத்தில் இறங்கியிருக்கிறார். அதற்கு இந்த அணியின் கேப்டனும் தலையசைத்திருக்கிறார். சுய நலத்துக்காக சொந்தக் குழுவைத் தோற்கடித்திருக்கிறார்கள். இதற்கெல்லாம் தண்டனை கிடையாதென்றால்...
.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக