திங்கள், 4 ஏப்ரல், 2011

வரி ஏய்ப்பவர்கள்தான் உலகச்சாம்பியன்!

1. பிசிசிஐ தொடங்கி இத்தனை ஆண்டு காலமும் எந்த விதமான வரியும் கட்டவில்லை. அவர்கள் சேவை செய்கிறார்களா?.

2. உலகக் கோப்பை போட்டிகளுக்கான ஆயத்த உள்கட்டமைப்பு பொருள்களுக்கு வரி விலக்குப் பெற்றது பிசிசிஐயும் ஐசிசியும்.  ஏனென்றால் அவையெல்லாம் லாப நோக்கமற்ற அமைப்புகளா?

3. சச்சின் வரி ஏய்ப்பு செய்தார். அவரிடம் வரிக் கட்டும் அளவுக்கு எந்தப் பணமும் இல்லையா?

4. இப்போது யுவராஜ் சிங் ஆயிரம் முறை முத்தமிட்டது ஒரிஜினல் உலகக் கோப்பைதான். அதாவது இந்த அணிக்கு வழங்க வேண்டிய உலகக் கோப்பைதான். அதுவும் 10 கிலோ தங்கம்.

5. சுங்க வரித்துறையிடம் பிடிபட்டதும் ஒரிஜினல் உலகக் கோப்பைதான். 2003-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின்போது இரு உலகக் கோப்பைகளும் ஆஸ்திரேலியா அணியிடம் வழங்கப்பட்டது.  ஒரு கோப்பை வழக்கம்போல் துபைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இரண்டுமே பத்து கிலோ தங்கம்தான்.

6. யுவராஜ் சிங் முத்தமிட்ட உலகக் கோப்பை, சுங்கவரி செலுத்தாமல் மும்பைக்கு வந்தது எப்படி?

7. ஐசிசியின் கூற்றுப்படி, வரி ஏய்க்கப்பட்டது தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

8.  மன்மோகனும் கிலானியும் இருதரப்பு நட்புறவுக்காக மேற்கொண்ட பயணத்தை ஒரு நொடியில் அப்ரிதி உடைத்து எறிந்துவிட்டார். பாகிஸ்தானியர்களையும் முஸ்லிம்களையும் போல இந்தியர்களுக்குப் பெரிய மனது இல்லை என்று சொல்லிவிட்டார். அப்படி அவரை பிசிசிஐ என்ன செய்தது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறது.


9. சுவாரஸ்யம் இல்லாமல் தொடங்கிய ஒரு போட்டி உலக மகா பரபரப்பாக முடிந்திருக்கிறது.  அதன் மூலம் சில நாள்களில் தொடங்க இருக்கும் ஐபிஎல் போட்டிகளில் பிசிசிஐக்கு நல்ல வேட்டை. தோனி அணி இதற்கு முன்பு 20 ஓவர் ஒரு உலகக் கோப்பையை வென்ற போதுதான் ஐபிஎல் பிறந்தது. இப்போது பெரிய சாம்ராஜ்யமாகியிருக்கிறது. இருந்தாலும் உலகக் கோப்பை வெற்றிக்கும் ஐபிஎல் போட்டிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நம்புவோம்.  மலிங்கா மும்பை இந்தியன்ஸ் அணியில் ஆடுவதை தொடர்ந்து ரசிப்போம்.

10. நோஐபிஎல் பன்னாட்டு நிறுவனம் சில காலத்துக்கு மூடப்படுகிறது. ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய நிலுவை, பஞ்சப்படி, போனஸ் ஆகியவை வழங்கப்பட்டுவிட்டன.
..
..

2 கருத்துகள்: