புதன், 6 மே, 2009

ஒரு அனாமதேய மெயில்!

இரண்டு நாள்களுக்கு முன் எனக்கு ஒரு மெயில் வந்தது. அனுப்பியவர் பெயர் இருக்க வேண்டிய இடத்தில் ஒரு விடுகதை இருந்தது. அதை வைத்து அவரது பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டுமாம். வேறு பொழைப்பு இல்லையா என மொறுமொறுத்துவிட்டு, அடுத்த மெயிலுக்குத் தாவ முயன்றபோது, அதில் இருந்த ஒரு வாசகம் என் கவர்ந்தது. ஜெயிக்காத டீமுக்கு இத்தனை வீரர்களா என எழுதப்பட்டிருந்ததைப் பார்த்ததும் அந்த மெயிலை முழுமையாகப் படிக்கத் தொடங்கினேன். அவர் ஒரு ஐபிஎல் வீரராம். ஜெயிக்காத டீம் என்றால் அது நைட் ரைடர்ஸ்தான் என ஊகித்துக் கொண்டு மேலும் படித்தேன். எதற்காக 51 வீரர்களை விலைக்கு வாங்கினார்கள். எதற்காக என்னைப் போன்றவர்களை ஆட்டத்தில் சேர்ப்பதே இல்லை. ஒன்றுக்கும் உதவாத டாடாவை டீமில் எதற்கு வைத்திருக்கிறார்கள். எங்கள் டீமுக்கு வெளிநாட்டு கேப்டன் கண்டிப்பாகத் தேவையா. எனப் பலவாறக் கேள்வி எழுப்பி தனது உள்ளக் குமுறலைக் கொட்டியிருந்தார். கோச்சை பற்றியும் தகாத வார்த்தைகளால் திட்டயிருந்தார். சரி விடுங்கள் 51 பேரைக் கொண்ட டீமில் இதெல்லாம் சகஜம்தான் என அவருக்கு பதில் மெயில் அனுப்பினேன்.
அதுசரி, என்ன ஷாருக் டீமை விற்கப் போகிறீர்களா? வேண்டவே வேண்டாம். எங்க ஊர் மாரியாத்தா கோயில் திருவிழாவில் நடக்கும் டோர்னமென்டில் உங்க அணியை என்ட்ரன்ஸ் பீஸ் இல்லாமலேயே ஆட வைக்கிறோம். அழாதீரும். ஆறுதல் பரிசு 101 உங்களுக்குத்தான்.

1 கருத்து: