திங்கள், 4 மே, 2009

அணி அறிவிப்பு மர்மம்

இங்கிலாந்தில் அடுத்த மாதம் தொடங்கும் டி20 உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த அணி உலகக் கோப்பையை மீண்டும் வெல்லும் என வயித்தெரிச்சல் வெங்சர்க்கார்கூடச் சொல்லிவிட்டார். ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே ஏன் அணியை அறிவிக்க வேண்டும் என்ற சந்தேகத்தை எஸ்எம்எஸ்ஸில் நண்பர் ஒருவர் கேட்டார். விஷயம் ரொம்ப சிம்பிள். பெருந்தலைகளின் பரிந்துரை, பணப்பட்டுவாடா, அதிகார பலம் என்கிற உத்திகளைக் கொண்டு, ஏற்கெனவே அணியைத் தேர்வு செய்துவிட்டார்கள். ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகுதான் வீரர்களை அறிவிக்க வேண்டுமென்றால், அந்த அணியில் மாற்றம் செய்தாக வேண்டிய சூழல் ஏற்படும். கேப்டனையே கூட மாற்ற வேண்டிய நிர்பந்தம் கூட எழலாம். டிராவிட்டை கூடச் சேர்க்க வேண்டிய வரலாம். யார் கண்டது. அப்படிச் செய்தால் பணம் வாங்கியவர்களிடம் என்ன பதில் சொல்வது என நம்ம ஊர்க்காரர் தலைமையிலான தேர்வுக் கமிட்டி யோசித்திருக்கும். விளைவு, அவசர அவசரமாக அணி அறிவிப்பு. எனது அறிவுக்கு எட்டிய ஊகம்தான் இது. இதைவிட மோசமான தில்லுமுல்லுகள் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். நம்ம வாரியத்தில் இருப்பவர்கள் ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக