செவ்வாய், 8 மார்ச், 2011

ரஜினி ரசிகரா? இதைப் படிக்காதீங்க!

அரைநிஜார் போட்ட காலத்தில் நான் ரஜினி ரசிகராக இருந்தேன். தலையைக் கோதிவிடுவதும், சிலுப்புவதும் என்று பள்ளியிலும் வீட்டிலும் ரஜினி ஆக்சன்களாகவே இருக்கும். தனிக்கட்சி தொடங்கி தலைவர் முதல்வரானதும் எப்படியாவது பொதுப்பணித்துறையைக் கேட்டு வாங்கிவிடுவது என்கிற ஆசை உள்ளுக்குள் இருந்தது. பண்ணையில் சுவரேறிக் குதித்து பாலை எடுத்து வந்து கட்டவுட்களை குளிப்பாட்டிய சம்பவங்களும் நமது வரலாற்றில் உண்டு. அப்போதுதான் இதைப் பார்க்க நேர்ந்தது.



இதன் பிறகும் ரஜினி ரசிகராக இருக்க முடியவில்லை. இனி கேப்டனிடம் போய் சரணடைந்தேன். விருதாசலம் தொகுதிக்கு விருப்பமனுச் செய்தேன். ஆனால் பலனில்லை. கேப்டனுடன் தோளுக்குத் தோளாக நின்ற சமயத்தில்தான் இந்தக் காட்சியைக் காணவேண்டிய நிர்பந்தம் வந்தது.

உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு தலதான் சரியான சரியான ஆள் என்றார்கள். நாம் அவருடன் சேர்ந்த காலத்தில் அம்சமாக இருந்தார். கொஞ்சநாள் போனதும் இரண்டு இண்டேன் சிலின்டர்களை அடுக்கி வைத்தது போல் மாறிவிட்டார். அப்படியிருந்தும் சொன்ன பேச்சை கேட்காமல் ஒரு பாட்டுக்கு நடனமாடினார். அதில் ஊருக்குள் காலாரா வந்து பலர் உயிரை விட்டுவிட்டனர்.
காலராவை உருவாக்கிய பாடல் இதுதான்...



காலராவில் இருந்து மீண்டு யாருடைய ரசிகராகவோ தொண்டராகவோ இருக்க வேண்டும் என்பதற்காக பல காடு மலைகள் தாண்டி தவமிருந்து ஒருவரைக் கண்டுபிடித்தேன். அவர் பெயர் விஜய். வசனம் பேசுவதில் அவருக்கு நிகர் அவர்தான். அவரது படங்களைப் பார்க்கச் செல்லும்போது ஒரு டஜன் டோலோ 650 மாத்திரைகளைக் கொண்டு செல்வது மட்டும்தான் நமக்குப் பிரச்னையாக இருந்தது. வேறு எந்தத் தொந்தரவும் இல்லை. இப்படிச் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில் ஒருநாள் இந்தக் காட்சியை குளோசப்பில் பார்க்க நேர்ந்தது.



இதைப் பார்த்தபிறகு சிக்குன்குனியா வந்தது. இனிமேல் இப்படி எதையும் பார்க்கக்கூடாது என்பதற்காக எந்த சினிமாவையும் பார்ப்பதில்லை என்கிற முடிவுக்குவந்தேன். அப்போது ஒருநாள் டி.வி.யில் கிரிக்கெட் ஒளிப்பரப்பாகிக்கொண்டிருந்தது. அதில் நான் கண்ட சம்பவம்...
இது பொறுப்பதில்லை தம்பீ... ஆறாத ரணங்களைக் கொண்ட இந்த மனதை ஏன் வேல்கம்பால் குத்துகிறீர்கள் என்று எழுந்து நியாயம் கேட்கப் புறப்பட்டதன் விளைவுதான் இப்போது எழுதுவதெல்லாம்...
..
..

2 கருத்துகள்: