செவ்வாய், 18 ஜனவரி, 2011

சாந்தி ஸ்வீட்ஸில் இருக்கிறது, சரத் பவாரிடம் இல்லையா?

திருநெல்வேலி சாந்தி ஸ்வீட்ஸ் கடையில் அண்மையில் வருமான வரித்துறை ரெய்டு நடந்தது. கட்டுக்கட்டாகப் பணம் சிக்கியதாகச் செய்தி வந்திருக்கிறது. அவர்கள் வியாபாரம் நேரடியாகத் தெரிகிறது. வெறும் அல்வா மட்டுமே விற்று கட்டுக் கட்டாகப் பணம் சேர்க்க முடிகிறதென்றால், ரகசிய பேரங்களிலும் ரகசிய தொழிலிலும் கிரிக்கெட் வியாபாரத்திலும் எவ்வளவு பணம் கிடைக்கும்?

நம்மூர் அரசியல்வாதிகள் முதல் முக்கால்வாசி புலனாய்வு பத்திரிகையாளர்கள் வரை பேரம் பேசும் தொழிலைத்தான் செய்து வருகிறார்கள். அப்படிச் சேர்த்த பணம்தான் குட்டிக் குட்டி கரீபியன் தீவுகளிலுள்ள சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்த கள்ளப்பணத்தைப் பதுக்கி வைத்திருப்போர் பற்றி புலனாய்வு செய்வதற்கு தெஹல்கா முதல் உள்ளூர் வினவு வரை யாரும் தயாராக இல்லை. தெஹல்காவுக்கு தெரிந்தது ஜார்ஜ் பெர்னாண்டஸ், பங்காரு லட்சுமணன், மோடி மாதிரி ஆள்கள்தான். இப்போது ஜெஸிக்கா லால் கொலை வழக்கைப் பிடித்துக் கொண்டு பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். படியாவிட்டால் "நோ ஒன் கில்டு ஜெசிக்கா"  வெளியாகும். இல்லையென்றால் கதை வேறு மாதிரி திரும்பும். நம்மூர் புலனாய்வு பத்திரிகைகளை விட பேரம் பேச வேறு ஆள் உண்டா? குட் லக் தேஜ்பால்.

வெளிநாடுகளில் கள்ளக் கணக்கு வைத்திருக்கும் நம்மூர்காரர்கள் பற்றி அரசுக்கு நன்றாகவே தெரியும். இந்தா வைத்துக் கொள் என்று எத்தனையோ முறை ஜெர்மன்காரர்கள் நம்மிடம் கேட்டாகிவிட்டது. ஆனாலும் நம் ஆள்கள் அந்தப் பட்டியலைப் பெறுவதற்கு எந்த முனைப்பும் காட்டவில்லை. கிடைத்தால் மட்டும் என்ன செய்யப்போகிறார்கள். முதல் வேலையாக அதை தீ வைத்துக் கொளுத்துவார்கள்.  ஏனென்றால் பெரிய மேடம்தான் கள்ளக் கணக்கு வைத்திருப்போர் பட்டியலில் இருக்கும் முதல் ஆள்.

இந்த முறை அண்ணன் அசாஞ்சே கையில் பட்டியல் சிக்கியிருக்கிறது. அமெரிக்காவுக்கே அல்வா கொடுத்த அண்ணன், இந்த முறை இந்திய அரசியல் வாதிகளுக்கு கடுக்காய் கொடுப்பார் என்று நம்புவோமாக. கிரிக்கெட் பிழைத்துப் போகட்டுமே.

..

1 கருத்து: