சனி, 27 மார்ச், 2010

ஐபிஎல் பேட்டி: வீட்டுக்கொரு பந்து, ரேஷன் கடையில் ஸ்டம்பு

கேப்டன் கங்குலி அவர்கள் மிகச் சிறந்த கேப்டன் என்பதை அனைவரும் அறிவோம். நேற்றைய போட்டியில் அவர் மிகச் சிறந்த துடுப்பாட்டக்காரர் என்பதையும் நிரூபித்தார். அவர் 50 ரன்களை எடுத்த அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள் சிலருக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. பசிபிக் பெருங்கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கமும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அவ்வளவு ஏன் 50 ரன்கள் எடுத்ததில் அவரே அதிர்ச்சியாகி அவுட்டானார் என்றால், அந்த 50 ரன்களின் முக்கியத்துவம் பற்றிக் வேறென்ன கூற வேண்டியிருக்கிறது.

இப்படிப் போய்க்கொண்டிருக்கிற சூழலில், இன்றைய போட்டிகளைப் பற்றி நிஜமான கேப்டனிம் பேட்டியெடுப்பதற்காக அவரது வீட்டுக்கு  ஜோல்னா பையுடன் மூத்த பத்திரிகையாளர் பால்பாயிண்ட் அவர்கள் சென்றார்கள். பல பார்டர்களையும் ஏகே 67 களையும் தாண்டி கேப்டனிடம் எடுக்கப்பட்ட பேட்டி இது.

கேள்வி: ஐபிஎல் பத்தி உங்க கருத்து என்ன?

கேப்டன்: எல்லோருக்கும் பணம் கொடுத்து ஜெயிக்கிறாங்க. எல்லாம் மோசடி. எதுக்குப் பதினோரு பேரு சேந்து ஆடணும். தில்லு இருந்தா தனிச்சு நின்னு ஜெயிக்கட்டுமே பாக்கலாம்.


என்ன மாற்றம் கொண்டு வந்தா இது உருப்படும்?

நாட்டுல இப்ப 30 கோடியே 24 லட்சத்து 322 கிரிக்கெட் ரசிகர்கள் இருக்கிறாங்க. அதுல ஆம்பளைங்க 28 கோடியே 12. எழுதப்படிக்கத் தெரிஞ்சவங்க 39 கோடியே 23 லட்சத்து 57 ஆயிரத்து 128. மொத்த கிரவுண்டு 64, பிளேயர் எண்ணிக்கை ஆயிரத்து 548.


என்ன கேள்வி கேட்டாலும் இதுதான் உங்க பதிலா?

நக்கலா? நான் சொல்றேன் கேட்டுக்கோங்க. கிரிக்கெட் உருப்படணும்னா, வீட்டுக்கே போய் பந்து சப்ளை பண்ணணும். பேட், ஸ்டம்பெல்லாம் ரேஷன் கடைல கிடைக்கறதுக்கு ஏற்பாடு பண்ணணும். டிவியில ஹிந்திலயும் இங்கிலீஸ்லயும் கத்தறத விட்டுப்புட்டு தெலுங்குல பேசறதுக்கு ஏற்பாடு பண்ணணும். சீயர் லீடர்ஸ் பொண்ணுங்களயெல்லாம் கூட்டு அறிவுரை சொல்லணும்.

சரிங்க இன்னிக்கு நம்ம சென்னை டீம் ஜெயிக்குமா?


ஜெயிக்காது.

ஏன் அப்படி சொல்றீங்க?

அதக் கேக்காதீங்க. அதுதான் தீர்ப்பு.

ரசிகர்களுக்கு உங்க அறிவுரை?

யாரும் கல்யாண மண்டபம் கட்டாதீங்க.

...

.
.

1 கருத்து: