வியாழன், 30 ஏப்ரல், 2009

சாரி சொன்னால், பொது மன்னிப்பு!

இந்தியக் கிரிக்கெட் வாரியம் தனது குரூர புத்தியை மீண்டும் ஒரு முறை வெளிப்படையாகவே பயன்படுத்தியிருக்கிறது. இதுவரை ஐசிஎல் வீரர்களை பலவாறான இன்னல்களுக்கு உள்ளாக்கிய நமது கிரிக்கெட் வாரியம், இப்போது அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள முன்வந்திருக்கிறது. மனம் திருந்த விரும்பும் ஐசிஎல் வீரர்கள், ஒரு மாதத்துக்குள் கிரிக்கெட் வாரிய ஓனர்களின் கால்களில் விழுந்துவிட வேண்டும். அப்படிச் செய்துவிட்டால், ஒரு வருடம் புரோபேஷன் காலம் முடிந்ததும் இந்திய அணிக்குத் தேர்வாக வாய்ப்புக் கிடைக்கும்.

ஐபிஎல் அணிகளுக்காக ஆடும் வீரர்களை ஏக்கத்தோடு பார்த்துக் கொண்டிருக்கும் ஐசிஎல் வீரர்கள் அனைவருமே சாரி சொல்லத் தயாராக இருக்கிறார்கள் என்று தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்றைக்கு நமது பஞ்சம் தீரும் என்று விரக்தியில் இருக்கும் அவர்கள் மட்டுமல்ல, கூட்டத்தோடு கூட்டமாக கபில்தேவ் வந்தால்கூட சகல மரியாதையுடன் வரவேற்புக்கிடைக்கும். எப்படியோ எதிரணிக் கூடாரம் காலியாகப் போகிறது.

1 கருத்து:

  1. i feel pity of those ICL players; what else we can do?

    sharuk told; may be sunil shab is correct or the coach shab is correct.

    i am saying, may be kapil shab is correct or Lalith shab is correct.(should i write this under captain sharuk? :P :D )

    பதிலளிநீக்கு