ஞாயிறு, 19 ஏப்ரல், 2009

கேப்டன் ஷாருக்?

கிரிக்கெட்டை என்னைவிட ஓவராக நையாண்டி செய்வது ஷாருக்கான்தான். கோல்கத்தா அணியின் கேப்டனான... சாரி.. ஓனரான அவர், கேப்டன் பதவியை எப்படி வழங்குவது என்பதில் உலகுக்கே முன்மாதிரியாக இருந்திருக்கிறார். அதாவது கேப்டன் யார் என்பது போட்டி தொடங்கும்வரை யாருக்குமே தெரியாது. ஏன் ஷாருக், நீங்க என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? இப்படிக் குழப்புவதற்குப் பதிலாக நீங்களே கேப்டனாக இருக்கலாம். ஒரு வீரருக்கு தரவேண்டிய விலையாவது மிச்சப்படும். அப்புறம் கொஞ்சம் பணம் கொடுத்து ஒன்றிரண்டு வெற்றிகளை விலைக்கு வாங்கிக் கொண்டால் போயிற்று. அதெல்லாம் உங்களுக்குத் தெரியாதா என்ன?
டெக்கான்-கோல்கத்தா ஆட்டம் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாமதமாகத் தொடங்கியது. தொழில்நுட்பக் கோளாறு என்றார்கள். கொஞ்சம் டீப்பாக விசாரித்தபோது, விளக்குகள் தகராறு செய்ததாகக் கூறினார்கள். பவர் கட்டாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். தாமதமாகத் தொடங்கினாலும் இந்த ஆட்டத்தின் ஓவர்கள் குறைக்கப்படவே இல்லை. கடந்த ஆண்டில் சொதப்பித் தள்ளிய டிசி அணியினர் இந்தப் போட்டியில் கோல்கத்தா அணியினரை துவம்சம் செய்தார்கள். வெற்றியும் பெற்றார்கள். அதுசரி இந்த ஆட்டத்தில் ஏன் ஓவர்களைக் குறைக்கவில்லை என்று தெரியுமா?

1 கருத்து: